திமுக தலைவர் மு.க ஸ்டாலினுக்கு எதிரான 4 அவதூறு வழக்குகள் ரத்து!..

எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் மீதான 4 அவதூறு வழக்குகளை ரத்து செய்தது உயர்நீதிமன்றம்

.பொது வாழ்வில் உள்ளவர்களுக்கு விமர்சனங்களை எதிர்கொள்ளும் சகிப்புத்தன்மை வேண்டும் என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த 4 அவதூறு வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்தது.

ஜெயலலிதா குறித்து தெரிவித்த கருத்து தொடர்பான வழக்கு உள்ளிடவை ரத்து செய்யப்பட்டது. பொது வாழ்வில் உள்ளவர்கள் விமர்சனங்களை ஏற்கக்கூடிய சகிப்புத்தன்மை வேண்டும் என உயர்டநீதிமன்றம் கூறியுள்ளது.

அவதூறு வழக்குகளை ரத்து செய்யக் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மு.க.ஸ்டாலின் தொடர்ந்திருந்தார். அரசியல் கட்சி தலைவர்கள் தீவிரமான தனிப்பட்ட விமர்சனங்களை தவிர்க்க வேண்டும் என உயர்நீதிமன்றம் அறிவுறுத்தல் செய்துள்ளது.

உள்ளாட்சி துறை அமைச்சர் மற்றும் தமிழக அரசையும் முதல்வரையும் விமர்சித்ததாகவும், தமிழகம் முதல் மாநிலமாக தேர்ந்தெடுக்கபட்டது குறித்தும் அவதூறு கருத்துகள் தெரிவித்ததாக திமுக தலைவர் ஸ்டாலினுக்கு எதிராக தமிழக அரசு தரப்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டது.

குடியுரிமை திருத்தச் சட்டம் தொடர்பாகவும் விமர்சித்தது என ஸ்டாலினுக்கு எதிராக சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மூன்று அவதூறு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன. தமிழக அரசின் நற்பெயருக்கு களங்கம் கற்பிக்கும் வகையில் அவதூறாக பேசிய ஸ்டாலினை, அவதூறு சட்டப்பிரிவுகளின் கீழ் தண்டிக்க வேண்டும் எனக் கோரப்பட்டுள்ளது.