ஓட்டுனர் உரிமம், இன்சூரன்ஸ் புதுபிக்க செப்.,30 வரை கால அவகாசம்..

ஓட்டுனர் உரிமம், வாகன இன்சூரன்ஸ் ஆகியவற்றை புதுப்பிக்க செப்டம்பர் 30 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளதாக மத்திய அரசு அறிவித்து உள்ளது.

கரோனா வைரஸ் பரவலால் கடந்த மார்ச் இறுதியில் இருந்து ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. ஜூன் 1ம் தேதி முதல் அன்லாக் 1 என்ற பெயரில் பல தளர்வுகளை மத்திய உள்துறை அமைச்சகம் அறிவித்திருந்தது.

இதற்கிடையே ஊரடங்கால் முடங்கியுள்ள வாகன இன்சூரன்ஸ், ஓட்டுனர் உரிமம் புதுப்பிப்பு, பெர்மிட் போன்றவற்றிற்கான கால அவகாசம், ம் ஜூன் மாதம் 30 ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என ஏற்கனவே மத்திய அரசு அறிவித்தது.

இந்த நிலையில், தற்போது அவகாசத்தை ஜூலை 31 வரையில் மத்திய அரசு நீட்டித்து அறிவித்திருந்தது.

இந்நிலையில் இந்த அவகாசத்தை மத்திய வாகன போக்குவரத்துத்துறை மேலும் நீட்டித்து உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக வெளியான அறிவிப்பில், அனைத்து மோட்டார் வாகனம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் ஜூலை 31ம் தேதி வரையில் செல்லுபடியாகும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

தற்போது அவை செப்டம்பர் 30 வரையில் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதனையடுத்து எந்த வித அபராத கட்டணம் இன்றி நடவடிக்கையை மேற்கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது.