தேர்தல் பத்திர விவரங்களை நாளை மாலைக்குள் எஸ்பிஐ தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு..

அரசியல் கட்சிகளுக்கு நிறுவனங்கள் கொடுத்த தேர்தல் பத்திர வழக்கில் நாளை மாலைக்குள் விவரங்களை தாக்கல் செய்ய பாரத் ஸ்டேட் வங்கிக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

ஜூன் 30, 2024 வரை கால அவகாசம் கோரி SBI தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தது உச்ச நீதிமன்றம்.

தேர்தல் பத்திர விவரங்களைச் சமர்ப்பிக்க அவகாசம் கோரிய எஸ்பிஐயின் மனுவைத் தள்ளுபடி செய்துள்ள உச்சநீதிமன்றம், நாளைக்குள் (12.03.2024) தேர்தல் பத்திர விவரங்களை ஒப்படைக்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது. நம்ப முடியவில்லைதான். ஆனாலும் உச்சநீதிமன்றம் இந்த விவகாரத்தில் கடுமை காட்டி இருக்கிறது.