தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு…

தேர்தல் பத்திர எண்களை வெளியிட பாரத் ஸ்டேட் வங்கி(எஸ்பிஐ)-க்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளது.
🔹தேர்தல் பத்திர விவரங்களை தேர்தல் ஆணையத்தில் ஒப்படைத்த ஸ்டேட் வங்கி, ஒவ்வொரு தேர்தல் பத்திரத்துக்கும் உள்ள எண்களை குறிப்பிடவில்லை

🔹தேர்தல் பத்திர எண்களை வெளியிடாததால் எந்த நிறுவனம் வழங்கிய நன்கொடை எந்த கட்சிக்கு சென்றது என்று கண்டுபிடிக்க முடியவில்லை

🔹தேர்தல் பத்திர வழக்கு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தபோது எண்கள் வெளியிடாதது குறித்து மூத்த வழக்கறிஞர் கபில் சிபல் முறையீடு செய்தார்.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமர்வு திங்கள் கிழமைக்குள் தேர்தல் பத்திர எண்களை வெளியிட உத்தரவிட்டுள்ளது.