’’உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொடர்ந்து அமைப்பீர்களா?’’ : ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வி…

’’உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொடர்ந்து அமைப்பீர்களா? என்று ஒன்றிய அரசுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி கேள்வியெழுப்பியுள்ளார்.
எதற்கு இத்தனை கமிட்டி? ஒவ்வொரு முறையும் உங்களுக்கு பாதகமான அறிக்கை வரும் போது புதிய கமிட்டியை அமைப்பது போல் தெரிகிறது. உங்களுக்கு சாதகமான முடிவு கிடைக்கும்வரை புதிய கமிட்டியை தொர்ந்து அமைப்பீர்களா என்று கேள்வியெழுப்பினார்.
தீங்கு விளைவிற்கும் 27 பூச்சிக் கொல்லிகளை தடை செய்ய வேண்டும் என வனசக்தி அமைப்பு தொடர்ந்த வழக்கில் உன்றிய அரசுக்கு தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கேள்வியெழுப்பினார்.