கஜா புயல் பாதிப்பால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 46 ஆக உயர்வு..

தமிழகத்தை கோரத் தாண்டவமாடிய கஜா புயல் கடும் சேதத்தை ஏற்படுத்தியது. இந்தப் புயலில் இதுவரை 46 பேர் உயிரிழந்துள்ளதக் கட்டுப்பாட்டு மையம் தெரிவித்துள்ளது.

தஞ்சை,புதுக்கோட்டை,நாகை திருவாருர் மாவட்டங்களைச் சேர்ந்த 26 ஆண்களும், 17 பெண்களும் 3 குழந்தைகளும் கஜா புயல் காரணமாக உயிரிழந்துள்ளனர்.

உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரித்து வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.