இரட்டை இலை சின்னம் லஞ்ச வழக்கு : டிடிவி தினகரன் மனு தள்ளுபடி..

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் கொடுக்க முயன்றது தெடார்பான வழக்கில்டிடிவி தினகரன் மீதான புகாரில் முகாந்திரம் உள்ளது.

அவரை இந்த வழக்கில் இருந்து விடுவிக்க முடியாது என டெல்லி பாட்டியாலா நீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் தினகரன், சுகேஷ் சந்திரசேகர், மல்லிகார்ஜூன் ஆகியோர் மீது குற்றச்சாட்டை பதிவு செய்யவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

அத்துடன் டிசம்பர், 4-ந்தேதி நேரில் ஆஜராக தினகரனுக்கு உத்தரவிட்டுள்ளது.