ஸ்ரீஸ்ரீரவிசங்கர் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன? – உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி

 

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் தஞ்சை பெரியகோவிலில் நிகழ்ச்சி நடத்த அனுமதி வழங்கப்பட்டதற்கு எதிராக வெங்கட் என்பவர் தொடர்ந்த வழக்கு விசாரணையில், ஸ்ரீஸ்ரீரவிசங்கர் பஜனை நடத்துவதற்காக மட்டுமே அனுமதி தரப்பட்டது எனவும், பந்தல் போடவோ தியான பயிற்சி நிகழ்ச்சி நடத்தவோ அனுமதி தரவில்லை எனவும் மத்திய தொல்லியல் துறை தரப்பு விளக்கமளித்துள்ளது.

இதையடுத்து, விதி மீறிய ஸ்ரீஸ்ரீரவிசங்கரின் வாழும் கலை அமைப்பின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது என உயர்நீதிமன்ற மதுரை கிளை கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், தொல்லியல் துறை கண்காணிப்பு பொறியாளர் நாளை நேரில் ஆஜராகி விளக்கமளிக்கவேண்டும் உத்தவிட்டுள்ளது.