விடுமுறை வகையில் சிறப்பு ரயில்கள் : தென்னக ரயில்வே அறிவிப்பு….

விடுமுறை காலங்களில் ஏற்படும் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் வகையில் சிறப்பு ரயில்களை தென்னக ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

செங்கல்பட்டில் இருந்து கோவைக்கு வரும் 23,25,27,29 ஆகிய தேதிகள் மற்றும் ஜனவரி 3, 5, 8, 10, 15, 19 ஆகிய தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

செங்கல்பட்டில் இருந்து மாலை 6.30 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 6.55 மணிக்கு கோவை சென்றடையும்.

கோவையில் இருந்து செங்கல்பட்டுக்கு வரும் 19, 24,26, 28, 31 ஆகிய தேதிகளிலும், ஜனவரி 2,4,7,9,14,18 தேதிகளில் சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது.

கோவையில் இருந்து இரவு 10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் காலை 9.15 மணிக்கு செங்கல்பட்டு சென்றடையும்.

இந்த சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளதாக தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது.