எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால் ஜல்லிக்கட்டு போல் பெரிய போராட்டம் ஏற்படும் கமல் ..

எங்கள் மொழிக்காக நாங்கள் போராடத் தொடங்கினால், அது ஜல்லிக்கட்டை விட பன்மடங்கு பெரிதாக இருக்கும் என எச்சரித்தார் கமல்!!

ஹிந்தி திணிப்பிற்கு எதிராக மக்கள் நீதிமையம் தலைவர் கமல்ஹாசன் வீடியோ ஒன்றோ வெளியிட்டுள்ளார்.

அந்த வீடியோவுடன் ” இந்தியா இன்னும் சுதந்திர நாடாக இருப்பதை நிருபிக்க வேண்டிய நிர்பந்தத்தில் நீங்கள் இருக்கிறீர்கள்.

புதிய திட்டங்களோ, சட்டங்களோ இயற்றப்படும் பொழுது அது மக்களிடம் கலந்தாலோசிக்கப்பட வேண்டும்.

வெள்ளையனை வெளியேற்றியது வெற்று நாயகத்திற்காக அல்ல ஜனநாயகத்திற்காக” என்ற வரிகளுடன் அந்த வீடியோவை ட்விட்டர் பக்கத்தில் அவர் பதிவிட்டுள்ளார்.

அந்த வீடியோவில் அவர் கூறியுள்ளதாவது; “பல ராஜாக்கள் தங்களின் ராஜ்யங்களை விட்டுக்கொடுத்து உருவானது தான் இந்தியா.

ஆனால், விட்டுக்கொடுக்க முடியாது என்று உறுதியாக பல இந்தியர்கள், பல மாநிலங்கள் கூறிய விஷயம் எங்கள் மொழியும், கலாச்சாரமும் என்பது தான்.

1950 இந்தியா குடியரசான போது அதே சத்தியத்தை அரசு மக்களுக்கு செய்தது. அந்த சத்தியத்தை த்டீர் என எந்த ஷாவோ, சுல்தானோ, சாம்ராட்டோ மாற்றிவிட முயற்சிக்கக் கூடாது.

ஜல்லிக்கட்டு போராட்டம் என்பது சிறிய போராட்டம் சிறிய வெற்றி. எங்கள் மொழிக்காக நாங்கள் போராட துவங்கினால் அது, அதைவிட பன்மடங்கு பெரிதாக இருக்கும்.

அந்த ஆபத்து இந்தியாவிற்கோ, தமிழ்நாட்டிற்கோ தேவையற்றது. பெருமபாலான இந்தியர்கள் தங்கள் தேசிய கீதத்தை அவர்கள் மொழியில் பாடுவதில்லை, வங்காளிகளை தவிர.

இருப்பினும் அதனை சந்தோஷமாக பாடிக் கொண்டிருக்கிறோம். பாடிக் கொண்டு இருப்போம். காரணம்,

அதை எழுதிய கவிஞர் எல்லாக் கலாசாரத்திற்கும், எல்லா மொழிக்கும் தேவையான இடத்தையும் மதிப்பையும் அதில் கொடுத்ததுதான்.

இந்தியா என்பது ஒரு அற்புத விருந்து. அதை கூடி உண்போம். திணிக்க நினைத்தால் குமட்டி விடும். தயவு செய்து அதை செய்யாதீர்கள்.

வேற்றுமையில் ஒற்றுமையை எங்களால் காண முடியும். வாழிய செந்தமிழ்; வாழ்க நற்றமிழர்… வாழிய பாரத மணித்திரு நாடு” என தெரிவித்துள்ளார்.