ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்க உச்சநீதிமன்றம் உத்தரவு..

பெண் எஸ்.பிக்கு பாலியல் தொல்லை கொடுத்த ஐ.ஜி முருகன் மீதான பாலியல் வழக்கை, தெலங்கான மாநிலத்துக்கு மாற்றிய சென்னை உயர்நீதிமன்ற உத்தரவு ரத்து செய்தத உச்சநீதிமன்றம் வழக்கை தமிழகத்திலேயே விசாரிக்கலாம் என உத்தரவிட்டுள்ளது.
ஆட்சி மாறியுள்ளதால் தனது தமிழகத்திலேயே நியாயம் கிடைக்கும் என பெண் அதிகாரி கூறியிருந்தார்.
இதனிடையே பெண் எஸ்.பி-க்கு பாலியல் தொல்லை புகார் வழக்கில் முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. விசாரணைக்கு ஆஜராகாமல் இருக்கக்கூடாது என முன்னாள் சிறப்பு டிஜிபி-க்கு விழுப்புரம் நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.