உலக கோப்பை கிரிக்கெட் : ஆஸி.,அணியை வீழ்த்தி இந்திய அணி அபார வெற்றி…

சென்னை சேப்பாக்கம் விளையாட்டு அரங்கில் இன்று நடைபெற்ற ஐசிசி உலகக்கோப்பை 50 ஓவர் கிரிக்கெட் போட்டியில் ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான போட்டியில் இந்தியா அணி 6 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

முன்னதாக பேட் செய்த ஆஸித்திரேலிய அணி 199 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது. 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை நொக்கி களம் இறங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஓவரில் மிகப் பெரிய அதிர்ச்சியாக 2 ரன்களுக்கு 3 விக்கெட்டுகளை இழந்து பரிதவித்தது.

அடுத்து களத்தில் இருந்த விராட் கோலி மற்றும் கே.எல். ராகுல் ஜோடி அபாராமாக ஆடியது. விராட்கோலி 84 ரன்களுக்கு ஆட்டமிளந்தார். கே.எல் ராகுல் கடைசி வரை 97 ரன்கள் குவித்தார் இந்திய அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை ரூசித்தது.