ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை..

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா நகைகள் நாளை தமிழக அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்படவுள்ள நிலையில் கர்நாடக உயர்நீதிமன்றம் ஒப்படைக்க தடைவிதித்துள்ளது..
சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை பெற்ற முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வீட்டில் பறிமுதல் செய்யப்பட்ட நகைகள் மற்றும் பொருட்கள் தமிழக அதிகாரிகளிடம் நாளை ஒப்படைக்கப்படவுள்ளது.
இந்நிலையில் ஜெயலலிதா நகைகளை தமிழக அரசிடம் ஒப்படைக்க இடைக்கால தடை விதித்துள்ளது கர்நாடக உயர்நீதிமன்றம்.
ஜெயலலிதாவின் அண்ணன் மகன் தீபக் மற்றும் மகள் தீபா ஆகியோரின் மேல்முறையீட்டு மனு மீது கர்நாடக உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது