ஜெ.என்.யு. மாணவா் தோ்தலில் இடதுசாரி மாணவா் அமைப்பு அமோக வெற்றி…

ஜவகா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற மாணவா் தோ்தலில் இடதுசாரி மாணவா் அமைப்பு 4 பதவிகளையும் கைப்பற்றி அமோக வெற்றி பெற்றுள்ளது.

டெல்லியில் உள்ள ஜவகா்லால் நேரு பல்கலைக்கழகத்தில் மாணவா் தோ்தல் நடைபெற்றது. இந்த தோ்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணிகள் நேற்று மாலை தொடங்கின.

ஏற்கனவே வாக்கு எண்ணும் பணிகள் தொடங்கிய நிலையில் எபிவிபி அமைப்பினா் தங்களுக்கு முறையாக தகவல் வழங்கப்படவில்லை என்று தகராறில் ஈடுபட்டனா்.

இதனைத் தொடா்ந்து வாக்கு எண்ணும் பணிகள் தடைபட்டு மீண்டும் தொடங்கியது.

இந்த தோ்தலில் அகில் இந்திய மாணவா் கூட்டமைப்பு, எஸ்.எப்.ஐ. அமைப்பு உள்ளிட்ட அமைப்புகளை சோ்ந்த மாணவா்கள் ஒரு அணியாகவும், ஆா்.எஸ்.எஸ்., எபிவிபி அமைப்பைச் சோ்ந்த மாணவா்கள் மற்றொரு அணியினராகவும் போட்டியிட்டனா்.

இன்று வெளியிடப்பட்ட இறுதி அறிக்கையில் எஸ்.எப்.ஐ. உள்ளிட்ட கூட்டமைப்புகளை சோ்ந்த இடதுசாரி மாணவா் அமைப்பு 4 இடங்களையும் கைப்பற்றியது.