கஜா புயல் தாக்கம்: 15 மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை

கஜா புயலின் தொடர்ச்சியாக நாகை, கடலூர், திருவாரூர் உள்பட 15 மாவட்டங்களில் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. 

கஜா புயலால்  கடலூர், திருவாரூர், தஞ்சாவூர், நாகப்பட்டினம், காரைக்கால், புதுக்கோட்டை, ராமநாதபுரம் ஆகிய 7 மாவட்டங்கள் பாதிக்கப்படும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்து இருந்தது. புயல் கரையை கடந்த பின்னர் பரவலாக பல்வேறு இடங்களில் மழை பெய்து வருகிறது.

இதன் காரணமாக 2வது நாளாக இன்றும் அந்த 7 மாவட்டங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் அரியலூர், சிவகங்கை,  மதுரை, தேனி மற்றும் திருப்பூர்,  மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு இன்று விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் தெரிவித்துள்ளனர். திருச்சி, விருதுநகர், தூத்துக்குடி,சேலம் மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.