கண்டதேவி சொர்ணமூர்த்திஸ்வரர் கோயில் தேர் வெள்ளோட்டம் ஜன.21-ல் நடைபெறும்: அறநிலையத்துறை அறிக்கை தாக்கல்..

சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அருகே கண்டதேவியில் அமைந்துள்ள சொர்ணமூர்த்திஸ்வரர் திருக்கோயில் தேர் வெள்ளோட்டம் ஜனவரி21-ல் நடைபெறும் என அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளனர்.

உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இந்து சமய அறநிலையத்துறை அறிக்கை தாக்கல் செய்துள்ளது.

2019-ல் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவை பின்பற்றாத அறநிலையத்துறை அதிகாரிகள் மீது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டுள்ளது.