காரைக்குடியில் செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது..

காரைக்குடியில் நேற்று( 29.12.2021 )மாலை அம்பேத்கார் சிலை அருகே செல்போன் கோபுரம் மீது ஏறி போராட்டம் நடத்திய இளைஞர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.
முன்னதாக காரைக்குடி செஞ்சைப் பகுதியைச் சேர்ந்த முருகன் (வயது-32) என்பவர் நேற்று மாலை 5 மணியளவில் அம்பேத்கார் சிலை அருகே முத்து மாரியம்மன் கோயிலுக்குச் செல்லும் வழியில் உள்ள செல்போன் கோபுரத்தின் உச்சியின் மீது நின்று சட்டையைக் கழற்றி போராட்டம் செய்தார்.
இதனைக்கண்ட பொதுமக்கள் காவல்துறைக்கு தகவல் தெரிவித்தனர், காவல்துறையினர் வந்து அவரிடம் பேசியபோது அவர் தனது தம்பிக்கு விபத்து ஏற்பட்டது அதனை முறையாக காவல் துறை விசாரித்து நடவடிக்கை எடுக்காததால் போராட்டம் நடத்துவதாக கூறினார்.அவரின் தம்பி தற்போது மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருகிறாம், அவரின் கால் வெட்டி எடுக்கப்பட்டதாக தெரிவித்துள்ளார்.
தமிழக முதல்வர் , காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் நேரில் வரவேண்டும் என்றார், தீயணைப்பு துறையினர் மீட்க போராடி வருகின்றனர். அந்தப்பகுதியில் பொதுமக்கள் அதிகம் கூடினர்.
இந்நிலையில் அந்த பகுதிக்கு தற்போது மாங்குடி எம்எல்ஏ-வும் வந்துள்ளார். முருகன் ஏற்கேனவே செஞ்சை பகுதியில் இது போல் செல்போன் கோபுரம் மீது போராட்டம் நடத்தியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
மாங்குடி எம்எல்ஏ, மற்றும் காவல்துறையின் பேசினர். தீயணைப்பு துறையினரின் முயற்ச்சியால் ஒருவழியாக முருகன் கீழ் இறங்கி வந்தார். பின்னர் அவர் நடந்தே வடக்கு காவல் நிலையத்திற்கு சென்றார். அவரை காவல் துறையினர் விசாரித்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தியதாகவும், தற்கொலை மிரட்டல் விடுத்ததாகவும் 4 வழக்குகள் பதிவு செய்து கைது நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
போராட்டம் நடத்தி முருகன் கட்டிடத் தொழிலாளர் ஆவார். விபத்தில் தம்பி மருத்துவமனையில் அனுமதிகப்பட்ட நிலையில் காவல்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதற்காகத்தான் செல்போன் கோபுரத்தின் மீது ஏறி போராட்டம் நடத்தியதாக தெரிவித்தார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்