பள்ளிக் குழந்தைகளுடன் பிறந்தநாள் கொண்டாடிய தாளாளர் :காரைக்குடி செட்டிநாடு பப்ளிக் பள்ளி ஆசிரியர்கள் பெருமிதம்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி மானகிரியில் புகழ் பெற்ற செட்டிநாடு பப்ளிக் பள்ளி சிறப்பாக செயல்பட்டு வருகிறது. கல்வியுடன் குழந்தைகளின் தனித் திறமையையும் கண்டறிந்து பல சாதனை புரிந்து வருகிறது. இந்த சாதனைகளுக்குச் சொந்தக்காரர் பள்ளி தாளாளர் குமரேசன் அவர்கள்.
தனது பள்ளி குழந்தைகள்,ஆசியர்களுடன் பிறந்தநாளை தாளாளர் குமரேசன் கொண்டாடினார். பள்ளிக் குழந்தைகள் அவருக்கு இனிப்பு ஊட்டி பிறந்த நாள்“ வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.


தாளாளர் குமரேசன் குறித்து ஆசிரியர்கள் பெருமிதத்துடன் கூறியது :
செட்டிநாடு பள்ளி உருவாகிய காலம் தொட்டு பள்ளி தாளாளர் குமரேசன் அவர்கள் முழு ஈடுபாட்டுடன் நல்ல அர்பணிப்பு உணர்வோடு செயல்பாடுவார்கள்., குழந்தைகளின் கல்வி,சுகாதாரம் இரண்டிலும் எந்தவிதமான சமரசமும் செய்யமாட்டார்கள், குழந்தைகளின் கல்வியுடன் அவர்களின் தனித்திறமையையும் கண்டறிந்து ஊக்கப்படுத்தி இந்தியளவில் ஏன் உலக அளவில் பல குழந்தைகள் சாதனையார்களாக திகழ்ந்து வருகின்றனர்.
கனிவான பேச்சும், ஆசிரியர்களுக்கு அவர் கொடுக்கும் ஊக்கமும் அளப்பறியது. சுறுசுறுப்புக்குச் சொந்தக்காரர் எனத் தெரிவித்தனர்.
பள்ளி தாளாளர் குழந்தைகள் மற்றும் ஆசிரியருடன் பிறந்த நாள் கொண்டாடியது மிகுந்த நெகிழ்ச்சியான விசயமாகும்.

செய்தி &படங்கள்
சிங்தேவ்