காரைக்குடியில் நடைப்பயிற்சி செய்வோரிடம் கார்த்தி சிதம்பரம் எம்.பி வாக்கு சேகரிப்பு..

காரைக்குடியில் அதிகாலை நடைப்பயிற்சி செய்வோரிடம் சிவகங்கை எம்.பி கார்த்தி சிதம்பரம் காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடிக்கு ஆதரவாக வாக்கு சேகரித்தார்.

அப்போது அவர் அதிமுக ஆட்சியின் அவலங்களையும், மத்திய அரசின் மக்கள் விரோத போக்குகளையும் எடுத்துரைத்தார்.

காங்கிரஸ் வேட்பாளர் மாங்குடி எளிய மனிதர்,எளிதில் அணுக கூடியவர், இருமுறை சங்கராகுரம் ஊராட்சி மன்றத் தலைவராக பணிபுரிந்து மக்களின் தேவைகளை அறிந்தவர் எனத் தெரிவித்தார். உங்களின் ஒருவராக செயல்படுவார் எனத் தெரிவித்தார்.


இதன்பின் பேசிய வேட்பாளர் மாங்குடி காரைக்குடி தொகுதி மக்களுக்கு தேவையான அனைத்த தேவைகளையும் நிறைவேற்ற பாடுபடுவேன் என்றார்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்