கர்நாடகவில் அடுக்குமாடி கட்டிடம் இடிந்து விழுந்து ஒருவர் உயிரிழப்பு: 40 பேர் இடிபாடுகளுக்குள் சிக்கித் தவிப்பு..

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்டு வந்த அடுக்குமாடிக் கட்டிடம் இடிந்து விழுந்த விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

40க்கும் மேற்பட்டோர் உள்ளே சிக்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.

கர்நாடக மாநிலம் தார்வார்டில் கட்டப்பட்ட நிலையில் இருந்த கட்டிடம் ஒன்று இன்று பிற்பகல் திடீரென இடிந்து விழுந்தது.

இதில் கட்டிடம் கட்டும் பணியில் ஈடுட்டிருந்த தொழிலாளர்கள் 15 பேர் உட்பட 40க்கும் மேற்பட்டோர் சிக்கிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக முதல்கட்டத் தகவல்கள் தெரிவிக்கின்றன. 40க்கும் மேற்பட்டோர் இடிபாடுகளுக்குள் சிக்கிக் கொண்டனர்.

படுகாயமடைந்த சிலர் மீட்கப்பட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர்.

இதுகுறித்து முதல்வர் குமாரசாமி தனது ட்விட்டர் பக்கத்தில் கூறுகையில், ”தார்வார்டில் கட்டப்பட்டு வந்த நிலையில் கட்டிடம் ஒன்று இடிந்து விழுந்த தகவல் கேட்டு மிகவும் அதிர்ச்சியடைந்தேன்.

உடனடியாக மீட்புப் பணிகளைத் தொடங்க தலைமைச் செயலாளருக்கு உத்தரவிட்டுள்ளேன்.

5 பேர் மீட்கப்பட்டுள்ளதாக தகவல் வந்தது. மீட்புக் குழுவினரை உடனடியாக விமானத்தில் அழைத்துச் செல்லவும் உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன” எனக் கூறினார்.