கருணாநிதி சதமடிப்பார் : சந்திப்புக்கு பின் முன்னாள் பிரதமர் தேவே கவுடா பேட்டி..


காவேரி மருத்துவமனைக்கு இன்று வருகை தந்த முன்னாள் பிரதமர் தேவே கவுடா, கருணாநிதியின் உடல்நலம் குறித்து ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

தமிழக முன்னாள் முதல்வரும், தி.மு.க. தலைவருமான மு.கருணாநிதி வயோதிகம் சார்ந்த உடல்நலக்குறைவு காரணமாக வீட்டிலேயே ஓய்வெடுத்து வந்தார்.

பின்னர் அவரது உடல்நிலை பாதிக்கப்பட்டதை அடுத்து ஆழ்வார்பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் கடந்த மாதம் 27-ம் தேதி அனுமதிக்கப்பட்டார்.

மருத்துவ சிகிச்சைக்கு பின்னர் அவர் உடல்நிலை தேறி வருவதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இந்நிலையில், முன்னாள் பிரதமர் தேவே கவுடா காவேரி மருத்துவமனைக்கு வருகை தந்து கருணாநிதியின் உடல்நிலை தொடர்பாக ஸ்டாலின் மற்றும் கனிமொழியிடம் கேட்டறிந்தார்.

இதனை அடுத்து, செய்தியாளர்களிடம் பேசிய அவர், “கருணாநிதி நூறாண்டுகள் வரை நலமுடன் வாழ்வார்” என கூறினார்.