காஷ்மீர் தாக்குதலில் வீரமரணம் அடைந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினரை நேரில் சந்தித்து மு.க.ஸ்டாலின் ஆறுதல்..

காஷ்மீர் பயங்கரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த சுப்பிரமணியனின் குடும்பத்தினரை, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து ஆறுதல் கூறி, இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.

காஷ்மீர் மாநிலம் புல்வாமாவில், கடந்த 14ம் தேதி நடத்த வெடிகுண்டு தாக்குதலில், தமிழகத்தை சேர்ந்த சி.ஆர்.பி.எப் வீரர் சுப்பிரமணியன் வீரமரணம் அடைந்தனர்.

பின்னர் அவரது சொந்த ஊரான தூத்துக்குடி மாவட்டம் சவலாப்பேரியில் முழு அரசு மரியாதையுடம் அவரது உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இந்நிலையில் அவரது வீட்டிற்கு எம்.பி கனிமொழியுடன் சென்ற திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், சுப்பிரமணியனின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

சுப்பிரமணியனின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்திய மு.க.ஸ்டாலின், அவரது குடும்பத்தாரிடம் இரண்டு லட்சம் ரூபாய் நிதியுதவி வழங்கினார்.