கோட்டையூர் பேரூராட்சி 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி பாஜகவில் இணைந்தார்..

சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே அமைந்துள்ள கோட்டையூர் பேரூராட்சியில் 4வது வார்டு சுயேச்சை கவுன்சிலர் திருமதி.பொன்னழகு மணி அவர்கள் இன்று பாரதிய ஜனதா கட்சியில் மாவட்ட தலைவர் மேப்பல் சக்தி (@) சத்தியநாதன் தலைமையிலும், முன்னாள் தேசிய செயலாளர் திரு.H.ராஜா அவர்கள் முன்னிலையிலும், பாஜக கட்சியில் இணைந்தார்.

இந்நிகழ்வில் மாவட்ட பொதுசெயலாளர்கள் திரு.மார்தாண்டம் & திரு.A.நாகராஜன் , மாநில துணைத்தலைவர் இளைஞரணி திரு.D.பாண்டித்துரை அவர்கள் முன்னிலையிலும், கோட்டையூர் பேரூராட்சி நகர் தலைவர் ரவீந்தீரன், ஒன்றிய தலைவர் பாண்டியநாராயணன், ஒன்றிய பொது செயலாளர்கள் குமரேசன் மற்றும் மெய்யர் அவர்கள் முன்னிலையில் இணைந்தார்கள்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்