குட்கா ஊழல் : 40 இடங்களில் சிபிஐ அதிரடி சோதனை..


குட்கா ஊழல் தொடர்பாக தமிழகம் முழுவதும் பல்வேறு பகுதிகளில் சிபிஐ அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

காவல்துறை உயர் அதிகாரிகள் வீடுகளிலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் 40 இடங்களில் சோதனை நடைபெறுவதாக தகவல் வெளியாகியள்ளது.

டிஜிபி டி.கே. ராஜேந்திரன், முன்னாள் ஆணையர் ஜார்ஜ் மற்றும் அமைச்சர் விஜயபாஸ்கர் இல்லங்களில் சிபிஐ அதிரடி சோதனை.

தமிழக போலிசார் விசாரித்து வந்த இவ்வழக்கை அண்மையில் சிபிஐ-க்கு மாற்றியது உயர் நீதிமன்றம்.