இலங்கை பொருளாதார நெருக்கடி: தமிழகத்திற்கு வரும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது: சீமான்…

இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது – நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
இலங்கை நாட்டில் ஏற்பட்டுள்ள பொருளாதார வீழ்ச்சியினால் அத்தியாவசியப் பொருட்களின் விலை பன்மடங்கு உயர்ந்து அந்நாட்டுக் குடிமக்கள் அன்றாடச் செலவினங்களைக்கூட எதிர் கொள்ள முடியாது. சிங்கள இனவெறிபிடித்து,தமிழர்களை அழித்தொழிக்க உலககெங்கும் கடன்களை வாங்கிக் குவித்து,நாட்டு மக்களின் வாழ்வியல் மேம்பாட்டிலும் அனைவரையும் உள்ளடக்கிய பொருளாதார வளர்ச்சியிலும் கவனம் செலுத்தாத கொடுங்கோல் சிங்கள ஆட்சியாளர்களின் இனவெறிச்செயல்பாடுகளே இத்தகைய நிலைக்கு காரணமென்றாலும்,இன்றைக்கு தமிழர்களும் சேர்ந்து பாதிப்புக்குள்ளாக்கி நிற்பது பெரும் வேதனையைத் தருகிறது.

Image

இத்தகைய சூழலில் இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடி காரணமாக தமிழகத்தில் தஞ்சமடையும் இலங்கை தமிழர்களை கைது செய்யக்கூடாது என நாம் தமிழர் ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிக்கை வெளியிட்டுள்ளார்.