குக்கிராம வீட்டுத் திண்ணையில் அமர்ந்து குமுறல்களைக் கேட்டறிந்த ஸ்டாலின் (வீடியோ)

 

ஓசூரில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் நடைபெற்ற மாபெரும் பிரச்சார பொதுக்கூட்டத்தில் எழுச்சியுரையாற்றிவிட்டு திரும்பிய தி.மு.க தலைவர் மு.க. ஸ்டாலினுக்கு குமுதபள்ளி என்ற கிராமம் அருகே திரளான பெண்களும் சிறுவர்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இதை பார்த்த திமுக தலைவர் மு.க. ஸ்டாலின், கிராமத்திற்குள் சென்று வீடு ஒன்றின் திண்ணையில் அமர்ந்து பெண்களுடன் கலந்துரையாடினார். அப்போது கேஸ் விலை உயர்வு, காய்கறி விலை உயர்வு ஆகியவற்றை சுட்டிக்காட்டி தங்களின் வேதனைகளை பெண்கள் எடுத்துரைத்தனர். அனைத்தையும் கேட்டுக்கொண்ட திமுக தலைவர், மத்தியிலும் மாநிலத்திலும் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு நம்முடைய ஆட்சி அமையும் போது உங்களின் குறைகள் அனைத்தும் களையப்படும் என்று வாக்குறுதி அளித்தார்.மக்களும் உற்சாகமாக ஆரவாரம் செய்தனர்.