மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயர் சூட்ட வலியுறுத்தி போராட்டம்

மதுரை விமான நிலையத்திற்கு முத்துராமலிங்கத் தேவர் பெயரை சூட்டக் கோரி மதுரையில் கடையடைப்பு மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தேவர் தேசபக்திப் பேரவை என்ற அமைப்பின் சார்பில் விடுக்கப்பட்ட அழைப்பை ஏற்று பல்வேறு இடங்களில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன.

இந்நிலையில் காலை 9.40 மணி முதல் மாலை 6 மணி வரை கோரிப்பாளையம்தேவர் சிலை முன் நடைபெற்ற ஆர்ப்பாட்டம் காரணமாக அந்தப் பகுதியில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

அண்ணா, பெரியார், மாட்டுத்தாவணி, பேருந்து நிலையங்களில் போராட்டத்தில் ஈடுபடச் சென்றவர்களையும், வைகை எக்ஸ்பிரஸ் ரயிலை மறிக்க முயன்றவர்களையும் போலீசார் கைது செய்தனர்.

இதனிடையே 3 அரசு பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பிற மாவட்டங்களில் இருந்து வந்த தேவர் தேசபக்திப் பேரவையினரை போலீசார் கைது செய்தனர்.