மதுரை அழகர் கோயில் பகுதிகளில் மது அருந்தத் தடை..

மதுரை அருகே புகழ் பெற்ற அழகர் கோயில் இயற்கை எழில் நிறைந்த ஆன்மீக பூமியாக திகழ்கிறது.

இக் கோயிலைச் சுற்றி உள்ள பகுதிகளில் மது அருந்த தடை விதிக்க வலியுறுத்தி திருத்தொண்டர் சபை சென்னை உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடர்ந்தது.

வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற மதுரைக்கிளை அழகர் கோயில் பகுதிகளில் மது அருந்த தடை விதித்தது.

இப்பகுதிகளில் ஆய்வு செய்து கோயில் சொத்துகள்,ஆக்கிரமிப்புகள் குறித்து அறிக்கை தாக்கல் செய்ய மாவட்ட ஆட்சியர் மற்றும் இந்து அறநிலையத் துறைக்கு சம்மன் அனுப்பியுள்ளது.