மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனம் சரியே: உயர்நீதிமன்ற கிளை பாராட்டு..

மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் குழு நியமனத்தை ரத்து செய்யக் கோரிய உயர்நீதிமன்ற மதுரை கிளை மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனு உயர்நீதிமன்ற மதுரை கிளையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணையில் மதுரை மீனாட்சி அம்மன் கோயில் அறங்காவலர் நியமனத்தில் எந்தவித விதிமீறலும் இல்லை என்று கூறி மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர் மகாராஜன் என்பவர் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.

அறங்காவலர் குழுவில் 3 பெண்களை இடம்பெறச் செய்தது நீதிமன்றத்துக்கு மிகவும் திருப்தி அளிக்கிறது என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை நீதிபதிகள் பாராட்டு தெரிவித்துள்ளனர். ருக்மணி பழனிவேல்ராஜன் அறங்காவலராக நியமனம் செய்யப்பட்டதில் என்ன தவறு உள்ளது? என்றும் நீதிபதிகள் மனுதாரர் வழக்கறிஞர் மகாராஜனுக்கு கேள்வி எழுப்பியுள்ளது. இந்நிலையில் இந்த வழக்கை தள்ளுபடி செய்து உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.