மதுரையில் வாக்கு எண்ணிக்கை ஆவண அறைக்குள் பெண் அதிகாரி நுழைந்ததை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் முறையீடு.

மதுரை மக்களவை தொகுதி வாக்கு எண்ணிக்கை மையத்தில் பெண் அதிகாரி அத்துமீறி நுழைந்ததை எதிர்த்து முறையீடு செய்யப்பட்டது.

மதுரையில் வாக்குப்பதிவு ஆவண அறைக்குள் வட்டாட்சியர் சம்பூர்ணம் நுழைந்தது பற்றி சரியாக விசாரிக்கவில்லை என்றும் எனவே உயர்மட்ட விசாரணைக்கு உத்தரவிடக் கோரியும் மதுரையில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் வேட்பாளர் சு, வெங்கடேசன் தரப்பில் உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டது.

இதையடுத்து நாளை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதாக நீதிபதிகள் ஒப்புதல் அளித்துள்ளனர்.