மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு: வெள்ளிக்கிழமை கதர் ஆடை அணிய வலியுறுத்தல்..

மகாராஷ்டிராவில் அரசு ஊழியர்களுக்கு ஆடை கட்டுப்பாடு விதித்து அரசு அறிக்கை வெளியிட்டள்ளது.
அதன்படி “தொழில் முறை” தோற்றமளிக்கும் ஆடைகளை மட்டுமே அரசு அலுவலகங்களில் ஊழியர்கள் அணிய வேண்டும். ஜீன்ஸ்,டி-சர்ட் போன்ற ஆடைகளையும் சாதாரண பயன்பாட்டிற்கான காலணிகளையும் அணியக்கூடாது.
நெசவாளர்களை ஊக்குவிக்கும் வகையில் வெள்ளிக் கிழமைகளில் கதர் ஆடை அணிய வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது,