மலேசிய பிரதமர் நஜீப்புடன் மு.க.ஸ்டாலின் சந்திப்பு..

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் நடைபெற்ற தமிழ் எமுத்தாளர் மாநாட்டில் பங்கேற்க சென்ற திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் மலேசிய பிரதமரை சந்தித்தார்.

மலேசிய பிரதமர் மாண்புமிகு நஜீப் ரஜாக் அவர்களை திராவிட முன்னேற்றக் கழகத்தின் செயல் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான தளபதி மு.க.ஸ்டாலின் அவர்கள் மரியாதை நிமித்தமாக சந்தித்தார்.
அந்தச் சந்திப்புக்கு பின் செய்தியாளர்களிடத்தில் அவர் பேசிய விவரம் பின்வருமாறு:

மலேசிய பிரதமர் மாண்புமிகு நஜீப் ரஜாக் அவர்களை மரியாதை நிமித்தமாக சந்தித்தேன். அவரது சிறந்த நிர்வாகத்தில் மலேசிய நாடு முன்னேற்ற மடைந்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது.

மலேசிய நாட்டின் முன்னேற்றத்தில் மலேசிய வாழ் இந்தியர்களும்-குறிப்பாக தமிழர்களும் பெரும் பங்காற்றி வருவது பெருமைக்குரியதாக இருக்கிறது.

தலைவர் கலைஞர் அவர்கள் பற்றியும், தமிழக மக்கள் பற்றியும் மிகவும் ஆர்வத்துடன் மலேசிய பிரதமர் கேட்டு அறிந்து கொண்டார். அப்போது, நடைபெவிருக்கின்ற தேர்தலில் மலேசிய பிரதமர் மீண்டும் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்தினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.