மலேசிய மணல் எண்ணூர் துறைமுகம் வந்தடைந்தது..

மலேசியாவில் இருந்து சென்னை எண்ணூர் துறைமுகத்துக்கு கப்பலில் வந்த 56 ஆயிரம் மெட்ரிக் டன் மணலை இறக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

தமிழகத்தில் மணல் தட்டுப்பாட்டை போக்க வெளிநாட்டு மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு முடிவு செய்தது.

இதன்படி மலேசியாவின் பீகான் துறைமுகத்தில் இருந்து 56 ஆயிரத்து 750 மெட்ரிக் டன் மணலை எம்.வி. அவ்ரலியா என்ற கப்பல் மூலம் எண்ணூர் துறைமுகத்துக்கு கொண்டுவரப்பட்டது.