மானாமதுரை அருகே கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜினாமா..

சிவகங்கை மாவட்டம் மானாமதுரை ஊராட்சி ஒன்றியத்தை சேர்ந்த கால்பிரவு ஊராட்சி மன்ற தலைவர் ராஜேஸ்வரி ராஜினாமா செய்துள்ளார்.
ஊராட்சி மன்ற துணைத்தலைவர் உள்ளிட்டோர் தன்னிடம் சாதி அடிப்படையில் பாகுபாடு காட்டுவதாக ராஜேஸ்வரி குற்றம் சாட்டியுள்ளார்.