அளவில்லா மருத்துவக் குணம் கொண்ட அற்புத மருந்து பெருங்காயம் …

நம் வீட்டுச்சமையல் அறையே ஒரு மினி வைத்தியசாலை எனலாம். நோய் வரும் முன் காக்கவும்,வந்தால் தீர்க்கவும் பயன்படுவது அஞ்சறை பெட்டியே ..
அதபோல் அன்றாடம் நம் சமைக்கும் உணவில் நறுமணம் ஏற்படுத்தும் பெருங்காயம் உடலுக்கு மருந்தாகவும் பயன்படும்.
இத்தகைய அருமருந்தாகவிளங்கும் பெருங்காளத்தின் அளப்பறிய நம்மைகளை அறிந்து கொள்வோம்.
தினம் ஒரு சிட்டிகை பெருங்காயத் தூளை சுடுநீரில் கலந்து குடிப்பதால் பெறும் நன்மைகள் .
நன்மைகள்
◆பெருங்காயத்தில் அழற்சி எதிர்ப்பு பண்புகள் உள்ளன. இது அஜீரணம் சம்பந்தமான பிரச்சனைகளை சரிசெய்வதோடு, அசிடிட்டி பிரச்சனையில் இருந்து உடனடி நிவாரணம் அளிக்கும்.
◆ஆயுர்வேதத்தின் படி, பெருங்காயம் சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது.சர்க்கரை நோய் உள்ளவர்கள், தினமும் காலையில் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரைக் குடிப்பதால், இரத்த சர்க்கரை அளவு கட்டுப்பாட்டில் இருக்கும்.
சர்க்கரை நோய் இல்லாதவர்கள் குடித்தால், சர்க்கரை நோய் வருவதைத் தடுக்கலாம்.
◆பெருங்காயத்தை நீரில் போட்டு வேக வைக்கும் போது, அதில் நீர்ப்பெருக்கி பண்புகளை உற்பத்தி செய்யப்படுகிறது.
இந்நீரைப் பருகும் போது, அது சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களை சுத்தம் செய்து, அனைத்துவிதமான சிறுநீரக தொற்றுகளில் இருந்தும் பாதுகாப்பளிக்கும்.
◆ஒருவர் தினமும் பெருங்காயத் தூள் சேர்க்கப்பட்ட சுடுநீரை குடிக்கும் பழக்கத்தைக் கொண்டால், அவர்களின் எலும்புகள் வலிமையடைந்து, எலும்பு சம்பந்தப்பட்ட பிரச்சனைகளில் இருந்து விடுபடலாம்.
◆பெருங்காயத்தில் ஆன்டி-பாக்டீரியல் பண்புகள் உள்ளன.ஆகவே ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்கள், பெருங்காயத் தூளை வெதுவெதுப்பான நீரில் கலந்து தினமும் குடித்து வந்தால், ஆஸ்துமா பிரச்சனையில் இருந்து முற்றிலும் விடுபடலாம்.
◆பெருங்காயத்தில் உள்ள பீட்டா-கரோட்டீன், கண்களைப் பராமரிக்க உதவுவதோடு, கண்களை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவும்.மேலும் தினமும் பெருங்காயத் தூளை நீரில் கலந்து குடித்து வந்தால், கண் வறட்சி தடுக்கப்பட்டு, கண்கள் பளிச்சென்று பிரகாசமாக தெரியும்.
◆பெருங்காயத்தில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் உள்ளன. இது இரும்புச்சத்து குறைபாட்டால் ஏற்படும் இரத்த சோகையை எதிர்த்துப் போராடி பாதுகாக்கும், பற்களை வலுவாக்கும் மற்றும் இதில் உள்ள புற்றுநோய் எதிர்ப்பு உட்பொருட்கள், புற்றுநோயைத் தடுக்கும்.

பெருங்காயம் சமையலை மட்டும் நறுமணம் அக்குவது போல் போல் மனிதனின் உடலையும் நோயில்லாமல் பாதுகாக்கிறது.
நன்றி
நாட்டு மருந்து