மாகாராஷ்டிரவில் உச்சகட்ட அரசியல் பரபரப்பு : மாநில துணை முதல்வராக பதவியேற்றார் அஜித் பவார்…

மகாராஷ்டிராவில் ஆளும் ஏக்நாத் ஷிண்டே தலைமையில் ஆளும் பாஜக கூட்டணியில் தேசியவாத காங்கரஸ் தலைவர்களில் ஒருவரும் மகாராஷ்டிர எதிர்கட்சித் தலைவருமான அஜித் பவார் துணை முதல்வராக பதவியெற்றுக கொண்டார்.

தனது எதிர்கட்சித் தலைவர் பதவியையும் ராஜினாமா செய்துள்ளார்.

அஜித் பவர் தனது 29 சட்டமன்ற உறுப்பினர்களுடன் ஆளும் சிவசேனா கட்சிக்கு ஆதரவளித்து மகாராஷ்டிரா சட்டமன்றத்தின் துணை முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். ஏற்கனவே துணை முதல்வராக உள்ள தேவேந்திர கங்காதர பட்னவீஸ் உடன் துணை முதல்வர் பதவியை பகிர்ந்து கொள்வார்.