ஏம்பல்-மதுரை புதிய வழித்தடத்தில் புதிய பேருந்து வசதி : மாங்குடி எம்எல்ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்…

காரைக்குடி புதுவயல் அருகே ஏம்பலிலிருந்து புதிய பேரூந்து வழித்தடத்தை காரைக்குடி சட்டமன்ற உறுப்பினர் மாங்குடி தலைமை தாங்கி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஏம்பலில் இருந்து புறப்பட்டு திருப்பனங்குடி, ஜெயங்கொண்டான், பீர்க்கலைக்காடு, புதுவயல், காரைக்குடி, திருப்பத்தூர், மேலூர் வழியாக மதுரை சென்றடையும்.


பொதுமக்களின் நீண்டநாள் கோரிக்கையையடுத்து தமிழ்நாடு முதல்வர்மு.க. ஸ்டாலினின் வாழ்த்துக்களுடன் இவ்வழித்தடத்தை மாங்குடி எம்.எல்.ஏ கொடியசைத்து தொடங்கி வைத்தார்.


இவ் விழாவில் புதுவயல் பேரூராட்சி தலைவர் முகம்மது மீரா, தி.மு.க சாக்கோட்டை கிழக்கு ஒன்றிய செயலாளர் சின்னத்துரை, பேரூராட்சி துணை தலைவர் பகுர்தீன் அலி, ஒன்றிய கவுன்சிலர் சொக்கலிங்கம், உஞ்சனை ஊராட்சி தலைவர் அருணகிரி, காங்கிரஸ் மாவட்ட துணை தலைவர் அப்பச்சி சபாபதி, புதுவயல் பேரூராட்சி தலைவர் முத்துக்கண்ணன்,

மாவட்ட காங்., சிறுபான்மை பிரிவு பொதுச்செயலாளர் கோடாலி ரகுமத்துல்லா, இளைஞர் காங்., நகர தலைவர் முகம்மது மீரா, திமுக மாவட்ட பிரதிநிதி அப்துல் ரகுமான், ஒன்றிய பிரதிநிதி நிஜாம் அகமது, போக்குவரத்து கழக துணை மேலாளர் வணிகம் நாகராஜன், கிளை மேலாளர் ரஹ்மான் உள்பட உள்ளாட்சி பிரதிநிதிகள்,அனைத்து கட்சி உறுப்பினர்கள்,பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

செய்தி & படங்கள்
சிங்தேவ்