அரசியல் கட்சி தொடங்கவில்லை : ரஜினிகாந்த் அறிவிப்பு..

அரசியல் கட்சி தொடங்கி அரசியலுக்கு வர முடியவில்லை என்பதை வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன் என்று நடிகர் ரஜினி கூறியுள்ளார்.
எனது முடிவு கட்சி ஆரம்பிப்பேன் என எதிர்பார்த்த ரசிகர்கள், மக்களுக்கு ஏமாற்றத்தை தரும்; அதற்க்கு என்னை மன்னியுங்கள் என ரஜினி தெரிவித்துள்ளார்.
முன்னதாக ரஜினி வரும் 31-ந்தேதி கட்சி பற்றி அறிக்கை வெளியிடுவாதாக அறிவித்திருந்தார் இதனிடையே அண்ணாத்தே படப்படிப்பின் போது படக்குழுவினர் சிலருக்கு கரோனா தொற்று உறுதியானது. ரஜினியும் தன்னை தனிமைப்படுத்திக்கொண்டார். திடீரென ரத்த அழுத்த மாறுபாடு காரணமாக ஐதராபாத் அப்பலோ மருத்துவமனைில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இதனைத் தொடர்ந்து ரசிகர்களுக்கு எழுதியுள்ள கடிதத்ததில் அரசியல் கட்சி தொடக்கப்போவதில்லை என அறித்திருக்கிறார்.