நவ.1ம் தேதி முதல் 1 முதல் 8ம் வகுப்பு வரை பள்ளிகள் திறக்கப்படும்: தமிழ்நாடு அரசு அறிவிப்பு..

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் 1- 8ஆம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.
தமிழகத்தில் கரோனா தொற்று பாதிப்பு குறைந்து வருகிறது. மற்றொருபுறம் தடுப்பூசி செலுத்தும் விகிதம் அதிகரித்து வருகிறது. இதனிடையே தமிழ்நாட்டில் தற்போது நடைமுறையில் இருக்கும் கட்டுப்பாடுகளுடன் கூடிய ஊரடங்கு நீட்டிப்பு குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று ஆலோசனை நடத்தியிருந்தார்.

இந்த ஆலோசனைக்கூட்டத்தில் 1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பது குறித்தும், வெள்ளி, சனி, ஞாயிறன்று வழிபாட்டுத் தலங்களில் தரிசனத்திற்கான தடையை நீக்கக் கோருவது பற்றியும் முடிவெடுக்கப்பட்டது.