ஆன்லைன் ரம்மி விளையாட்டு விபரீதம் :மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்ட வங்கி அதிகாரி.

சென்னையில் ஆன்லைன் ரம்மி விளையாட்டால் பணத்தை இழந்து கடன்காரராகி மனைவி குழந்தைகளைக் கொன்று தற்கொலை செய்து கொண்டார் வங்கி அதிகாரி
சென்னை பெருங்குடியில் உள்ள தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் 7வது மாடியில் கடந்த ஒரு வருடமாக வாடகைக்கு குடியிருந்து வருபவர் மணிகண்டன் (42), இவர் தனியார் வங்கியில் பணிபுரிந்து வருகிறார். ஆன்லைனில் ரம்மி விளையாட்டை விளையாடி பல லட்சங்களை இழந்து மன உடைந்துள்ளார். கடந்த இரண்டு மாதகாலமாக வேலைக்கு செல்லாமல் இருந்துள்ளார். மேலும் தனது நண்பர்களிடத்தில் பல லட்சம் ரூபாய், கடன் வாங்கியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இன்று தனது மனைவி தாரா(36), மற்றும் தரன்(10), தாஹன் (1), ஆகியோரை கொன்று விட்டு தானும் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

மனைவியை கிரிக்கெட் மட்டையால் தலையில் அடித்து கொன்று விட்டு இரு குழந்தைகளையும் தலையணையால் அழுத்தியும் கொலை செய்து விட்டு, தானும் வேட்டியால் சமையலறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். கடன் தொல்லை காரணமாக தனது குடும்பத்தினரை கொலை செய்து விட்டு தற்கொலை செய்து கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. தகவலறிந்து சென்ற துரைப்பாக்கம் போலீசார் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக இராயபேட்டை அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரித்து வருகின்றனர்.