பாடும் நிலா… காற்றில் கரைந்தது…

பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் உடல்நலக் குறைவால் காலமானார்.

கடந்த 51 நாட்களாக கரோனா தொற்று காரணமாக சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல பின்னணி பாடகர் எஸ்.பி் பாலசுப்பிரமணியன் (வயது 75) சிகிச்சை பலன் இல்லாமல் இன்று பகல் 1 மணிக்கு காலமானதாக அவரது மகன் எஸ்.பி. சரண் தெரிவித்தார்.
16 மொழிகளில் சுமார் 42 ஆயிரம் பாடல்களை பாடியுள்ளார். 6 முறை சிறந்த பாடகருக்கான தேசிய விருது பெற்றுள்ளார்.
எஸ்.பி.பி. உடல் மருத்துவமனையில் இருந்து இன்று மாலை 4:30 மணிக்கு வீட்டிற்கு எடுத்து செல்லப்படுகிறது.

அவரது உடல் நாளை காலை வரை சென்னையில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்படும். ன குடும்பத்தினர் தகவல் தெரிவித்துள்ளனர்.