பங்குனி உத்திர திருவிழா : சபரிமலை ஐயப்பன் கோயில் நடை இன்று மாலை திறப்பு..

பங்குனி உத்திர திருவிழாவை முன்னிட்டு சபரிமலை ஐயப்பன் கோவில் நடை இன்று (திங்கட்கிழமை) மாலை 5 மணியளவில் திறக்கப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவிதாங்கூர் தேவசம்போர்டு வெளியிட்டுள்ள அறிவிப்பில், செவ்வாய்கிழமை காலை 7.30 மணியளவில் திருவிழாவுக்கான கொடியேற்ற நிகழ்வு நடைபெறும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மார்ச் 11 தொடங்கி 21ஆம் தேதி வரை விழா நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கோவில் சன்னதியின் பழைய கதவில் சிறிய பிளவு ஏற்பட்டிருந்த நிலையில், தேக்கு மரத்தால் ஆன புதிய கதவு பொருத்தப்பட்டு அதன் மீது 4 கிலோ தங்க முலாம் பூசப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.