பேரறிவாளனுக்கு பரோல் மேலும் 2 வாரங்கள் நீட்டிப்பு..

ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்று சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு 1 மாதம் பரோல் வழங்கப்பட்டது.

இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள் சென்னை உயர்நீதிமன்றத்தில் பேரறிவாளனின் பரோலை மேலும் 1மாதம் நீட்டிக்க கோரினார்.

இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்ற நீதிபதிகள் பேரறிவாளனுக்கு 2 வாரம் பரோலை நீட்டித்து உத்தரவிட்டனர்.

பேரறிவாளனின் பரோல் நவ.9-ந்தேதி முடிவடைய இருந்த நிலையில் தற்போது பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.