பெரியாருக்கு சாதி அடையாளமா?: மு.க. ஸ்டாலின் கண்டனம்..

நேற்று நடைபெற்ற குரூப் 2 தேர்வில் ஒரு கேள்வியில் பெரியாரை சாதியுடன் அடையாளப்படுத்தியதற்கு மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

திருச்செங்கோடு ஆசிரமத்தை நிறுவியவர் யார் என்று குரூப்-2 வினாத்தாளில் கேள்வி எழுந்ததாகவும் அதில் இ.வெ.ராமசாமி நாயக்கர், காந்திஜி, ராஜாஜி, அண்ணாதுரை என்பதில் எது சரி என்று கேட்கப்பட்டது.

குரூப் தேர்வு வினாத்தாளில் பெரியாருக்கு சாதி அடையாளம் என குறிப்பிட்டிருந்ததை அடுத்து திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

மேலும் தாறுக்கு காரணமானவர்களை தமிழக அரசு பணிநீக்கம் செய்ய வேண்டும் எனவும் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.

அடாத செயலுக்கு தமிழக அரசு மன்னிப்பு கேட்க வேண்டும் என்று அறிக்கை வெளியிட்டுள்ளார்.