காவல் ஆணையர் அலுவலகத்தில் தேர்தல் காவல் கட்டுப்பாடு அறை திறப்பு

மக்களவை தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்பட உள்ள நிலையில், சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தின் 8வது தளத்தில், தேர்தல் காவல் கட்டுப்பாட்டு அறை திறக்கப்பட்டு உள்ளது.

காவல் கூடுதல் துணை ஆணையர் ரவிக்குமார் தலைமையில் செயல்படும் இந்த கட்டுப்பாட்டு அறை மூலம் தேர்தல் விதிமீறல் தொடர்பான புகார்கள் குறித்து உடனடி நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.

தேர்தல் சமயத்தில் வரும் புகார்கள் குறித்து உடனுக்குடன் தீர்வுகாணும் வகையில் இந்த காவல் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.