பொன்பரப்பி வன்முறை சம்பவத்திற்கு பாமக.,வே காரணம் : கள ஆய்வு செய்த குழு பேட்டி

சாதி ரீதியாக வன்முறை ஏற்படுத்தவே திட்டமிட்டு விசிகவின் பானை சின்னத்தை பாமக உடைத்துள்ளதாக பொன்பரப்பியில் கள ஆய்வு செய்த 10 பேர் கொண்ட குழு தெரிவித்துள்ளது.

சென்னை சேப்பாக்கத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அந்த குழு,

பெண்களை தரக்குறைவாக பேசியதுடன் பாமக தரப்பு வீடுகளை திட்டமிட்டே தாக்கியுள்ளனர் என்று கூறியுள்ளது.

மேலும், பொன்பரப்பி விவகாரத்தில் பாமக, இந்து முன்னணி இணைந்து செயல்பட்டுள்ளது என்றும்,

அங்கு மாற்றுத்திறனாளி ஒருவரை விசிக அடித்ததாக பாமக கூறுவதில் உண்மையில்லை எனவும் அக்குழு தெரிவித்துள்ளது.