ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு..

ஏழை தொழிலாளர்களுக்கு தலா ரூ.2000 வழங்கும் திட்டத்திற்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்யப்பட்டுள்ளது.

வறுமை கோட்டிற்கு கீழுள்ள குடும்பங்களுக்கு ரூ.2000 வழங்கும் தமிழக அரசின் முடிவை எதிர்த்து சட்டப்பஞ்சாயத்து இயக்கத்தை சேர்ந்த செந்தில் ஆறுமுகம் சென்னை உயர்நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் ஓட்டுக்கு லஞ்சம் கொடுக்கும் வகையில் திட்டம் இருப்பதாக மனுவில் செந்தில் குமார் குற்றம் சாட்டியுள்ளார்.

இதனிடையே 2000 ரூபாய் சிறப்பு நிதி வழங்க தடை கோரிய முறையீடு வழக்காக தாக்கல் செய்யும் பட்சத்தில் நாளை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளபப்டும் என்று நீதிமன்றம் அறிவித்துள்ளது.