2ம் கட்ட புதுமைப்பெண் திட்டம் : முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்…

திருவள்ளூர் மாவட்டம் பட்டாபிராம் பகுதியில் 2ம் கட்ட புதுமைப்பெண் திட்டத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்தார்.

இந்த விழாவில் பேசிய முதல்வர் மு.க.ஸ்டாலின்,’ பெண்கள் கல்வி பாதியில் நிறுத்தப்படக் கூடாது என்பதற்காகவே மாதம் ரூ.1,000 உதவித் தொகை வழங்கப்படுகிறது. மாணவிகளுக்கு மாதம் ரூ.1,000 வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தால் உயர்கல்வி சேர்க்கை 25% அதிகரித்துள்ளது,’என்றார்.

திமுக தேர்தல் அறிக்கையில் தெரிவிக்கப்பட்ட வாக்குறுதிகளில் 85%க்கும் மேல் நிறைவேற்றப்பட்டுள்ளது கலைஞர் இட்ட ஒரு கையெழுத்தால் லட்சக்கணக்கான பெண்களின் தலையெழுத்து மாறியது. இந்தியாவில் கலைஞர் ஆட்சியில் தான் சொத்துரிமை மீட்கப்பட்டது. பணியிடங்களில் 30% இட ஒதுக்கீடு தந்தவர் கலைஞர்,’என்றார்.