மாநிலங்களவை தேர்தலில் திமுக வேட்பாளராக எம்.எம்.அப்துல்லா போட்டி ..

செப்டம்பர் 13-ம் தேதி நடைபெறும் மாநிலங்களவை தேர்தலில் திமுக சார்பில் எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் காலியாக உள்ள 3 மாநிலங்களவை இடங்களில் 1 இடத்துக்கு செப்டம்பர் 13ம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. மாநிலங்களவைக்கான இந்தத் தேர்தலில் அதிமுக, திமுக சார்பில் யார் போடியிடுவார்கள் என்ற எதிர்பார்ப்பு இருந்து வந்த நிலையில், திமுக சார்பில், எம்.எம்.அப்துல்லா போட்டியிடுவார் என கட்சி தலைமை அறிவித்துள்ளது.
புதுக்கோட்டையைச் சேர்ந்த எம்.எம்.அப்துல்லா திமுகவின் வெளிநாடு வாழ் இந்தியர் நல அணியின் இணைச் செயலாளராக இருக்கிறார்.ஏற்கெனவே திமுக சார்பில் 7 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.