மனதில் இருந்த பாரத்தை இறக்கி வைத்துள்ளேன்: ஜெ., நினைவிடத்தில் சசிகலா பேட்டி..

என் மனதில் தேக்கி வைத்திருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்து இருக்கிறேன் என்று சசிகலா கூறினார்.
ஜெயலலிதா நினைவிடத்தில் இன்று கண்ணீர் மல்க மரியாதை செலுத்திய சசிகலா பின்னர் செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

இத்தனை ஆண்டுகளாக மனதில் இருந்த பாரத்தை ஜெயலலிதா நினைவிடத்தில் இறக்கி வைத்துள்ளேன். அதிமுகவையும், தொண்டர்களையும் எம்.ஜி.ஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என நம்புகிறேன்.
ஜெயல‌லிதா நினைவிடத்திற்கு நான் வந்த‌தற்கான காரணம் அனைவருக்கும் தெரியும். எம்.ஜி.ஆர் மற்றும் ஜெயலலிதா தமிழக மக்களுக்காகவே வாழ்ந்தனர்” என்றார்.

அதிமுகவுக்கு நல்ல எதிர்காலம் இருக்கிறது என்று ஜெயலலிதாவிடம் சொல்லிவிட்டு வந்தேன். ஜெயலலிதாவும் எம்ஜிஆரும் தமிழக மக்களுக்காகவும் தொண்டர்களுக்காகவும் வாழ்ந்தவர்கள். நிச்சயம் தொண்டர்களையும் கழகத்தையும் எம்ஜிஆரும் ஜெயலலிதாவும் காப்பாற்றுவார்கள் என்ற நம்பிக்கையுடன் புறப்படுகிறேன்” எனத் தெரிவித்தார்.